செய்திகள்
மின்சார வாரியம்

மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்

Published On 2020-06-26 14:19 GMT   |   Update On 2020-06-26 14:19 GMT
மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் (LT CONSUMER) மின் கட்டணம் செலுத்த அடுத்த மாதம் 15ந் தேதி வரை தாமத கட்டணமின்றி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News