செய்திகள்
கோவையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி
கோவை பீளமேடு ஹட்கோ குடியுருப்பில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை பீளமேடு ஹட்கோ குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது வீட்டின் கழிவறையில் இருந்து இன்று காலை விஷவாயு வெளியேறியது. இதன் காரணமாக ஸ்ரீதரின் மகன்கள் பாலாஜி, முரளி இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் பாலாஜி சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார்.
மற்றொரு மகன் முரளி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.