search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ வாயு தாக்குதல்"

    • விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    விஷ வாயு தாக்கி கோவிந்தன், சுப்புராயலு என்ற 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அவர்களை சடலமாக மீட்டனர்.

    விபத்து குறித்து தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.
    • தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், தேசிய நெடுஞ்சாலையில் சத்தியன் கிராண்ட் சொகுசு விடுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 5 தொழிலாளர்கள் வந்தனர்.

    அவர்கள் கழிவுநீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்துகொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது.

    இதில் அருகில் நின்று கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் 3 தொழிலாளர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் மூழ்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தொழிலாளர்கள் விழுந்த கழிவுநீர் தொட்டி சுமார் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனால் பலியான 3 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    பலியான 3 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (50), திருமலை (18), நவீன் (30) என்பது தெரிய வந்துள்ளது.

    கழிவுநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பாதுகாப்பாக முழுவதும் வெளியேற்றி உடல்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    உரிய பாதுகாப்பு இன்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம், மகேஷ் ஆகியோர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட் வாகனத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
    • திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் செய்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம் (வயது 22), மகேஷ் (35) ஆகியோர் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட் வாகனத்தை அப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    பாதாள சாக்கடையில் குழாயை செலுத்தி அடைப்பை அகற்ற முயன்றனர். ஆனால் வாகனத்தின் மூலம் அடைப்பை அகற்ற முடியவில்லை. இதையடுத்து மகேஷ் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை அகற்ற முயன்றார். பாதாள சாக்கடைக்குள் இறங்கிய மகேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் பாதாள சாக்கடைக்குள் இறங்கினார்.

    அவரும் வெளியே வரவில்லை. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் லட்சன்னா(22) என்பவரும் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு அவரையும் தாக்கியது. சுதாரித்துக்கொண்ட லட்சன்னா மூச்சை பிடித்துக்கொண்டு மேலே வந்து கத்தி கூச்சலிட்டார்.

    அருகிலிருந்தவர்கள் லட்சன்னாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதாள சாக்கடையில் இறங்கி பார்த்தபோது அங்கு விஷ வாயு தாக்கி மகேஷ், ஆறுமுகம் இறந்து கிடந்தனர்.

    2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திருப்பதி மாநகராட்சி என்ஜினியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×