செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா தடுப்பு பணி- அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆலோசனை

Published On 2020-04-21 10:59 GMT   |   Update On 2020-04-21 10:59 GMT
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை:

நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பங்கேற்றனர். 
Tags:    

Similar News