செய்திகள்
கொரோனா பாதிப்பு... சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் மூடல்
சென்னை புதுப்பேட்டையில் கொரோனா பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தெருக்களும் மூடப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் முழுமையாக மூடப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து புதுப்பேட்டையின் அனைத்து தெருக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. புதுப்பேட்டைக்குள் நுழையும் அனைத்து பாதைகளிலும் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.