செய்திகள்
சென்னை மாநகராட்சி

அவசர தேவைக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு

Published On 2020-04-01 02:40 GMT   |   Update On 2020-04-01 02:40 GMT
அவசர தேவைக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அவசர அழைப்பு எண்களை வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கட்டுப்படுத்தும் திட்டத்தை செயலாக்குதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவசர தேவைக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அவசர அழைப்பு எண்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான உதவிகள், பிரசவகால உதவிகள் உள்ளிட்ட அவரச தேவைக்காக வட சென்னையில் உள்ளவர்கள் 9445477658 என்ற எண்ணிலும், தென் சென்னையில் உள்ளவர்கள் 8939631500 என்ற எண்ணிலும், மத்திய சென்னையில் உள்ளவர்கள் 9445190698 என்ற எண்ணிலும் வீட்டில் இருந்தபடியே தொடர்பு கொண்டு உதவி கோரலாம். மேலும் மத்திய சென்னைக்கான அவசர உதவி எண் விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News