செய்திகள்
தேனி வாலிபர் - தர்பூசணியில் செதுக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உருவம்

தர்பூசணியில் மோடி, டிரம்ப் உருவம் வரைந்து தேனி வாலிபர் அசத்தல்

Published On 2020-02-24 04:06 GMT   |   Update On 2020-02-24 04:06 GMT
தர்ப்பூசணியில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் உருவப்படத்தை வரைந்து தேனி வாலிபர் அசத்தியுள்ளார்.
கூடலூர்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவருக்கு நாட்டின் பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 30) இவர் தர்பூசணியில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் உருவப்படத்தை செதுக்கியுள்ளார்.



இதனை பொதுமக்களின் பார்வைக்காகவும் அவர் வைத்துள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே சீன அதிபர் ஜின் பிங் மாமல்லபுரம் வருகை தந்தபோது தர்பூசணியில் அவரது உருவப்படத்தை வரைந்து பாராட்டை பெற்றுள்ளார். தற்போது தாஜ்மகாலுடன் பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியோர் இருப்பது போன்று செதுக்கியுள்ள படம் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
Tags:    

Similar News