செய்திகள்
விபத்து

பழனி அருகே வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி

Published On 2019-12-28 07:14 GMT   |   Update On 2019-12-28 07:14 GMT
பழனி அருகே வேன் கவிழ்ந்து அடுத்தடுத்து 2 பெண்கள் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழனி:

பழனி அருகில் உள்ள ஓபுலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 32 பேர் 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

மூகாம்பிகை கோவில் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு தங்கம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் வந்த மகுடீஸ்வரி, நாகமாணிக்கம் உள்பட 31 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சையில் இருந்த தங்கவேல் மனைவி ராஜலட்சுமி (65). இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் உடல்நிலை மோசமடையவே அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவர் ராமச்சந்திரன் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News