செய்திகள்
செம்மண் நிறத்தில் வந்த குடிநீர்

ஒரகடம் அருகே செம்மண் நிறத்தில் குடிநீர் - பெண்கள் அதிர்ச்சி

Published On 2019-12-04 06:52 GMT   |   Update On 2019-12-04 06:52 GMT
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதி படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.

ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் வரும் நீரையை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குடிநீரில் மழை நீர் கலந்து செம்மண் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News