செய்திகள்
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

தேன்கனிக்கோட்டையில் நக்சல் ஊடுருவலை தடுக்க போலீசார் வாகன சோதனை

Published On 2019-10-15 07:18 GMT   |   Update On 2019-10-15 07:18 GMT
தேன்கனிக்கோட்டையில் நக்சல் பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர வாகன சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை: 

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், நக்சல் தனிப்பிரிவுக்கு தீவிர வாகன சோதனை செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் தேன்கனிக் கோட்டை பகுதியில் நக்சல் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன், தேன்கனிக்கோட்டை போலீசாருடன் தனிப்படையினர் துப்பாக்கி ஏந்தியவாறு தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல் தமிழக எல்லையில் உள்ள கும்மளாப்புரம் சோதனை சாவடியிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. 
Tags:    

Similar News