செய்திகள்
முக ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம்

ஒரே விமானத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின்

Published On 2019-09-02 04:12 GMT   |   Update On 2019-09-02 04:12 GMT
நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.
ஆலந்தூர்:

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினரும், மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக காரில் ஏறிச்சென்று விட்டனர். 
Tags:    

Similar News