செய்திகள்
வெடிவிபத்து

விருதுநகரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலி

Published On 2019-08-23 16:59 GMT   |   Update On 2019-08-23 17:41 GMT
விருதுநகரின் சாத்தூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர்.

விசாரணையில், பட்டாசு குடோனில் இருந்து லாரியில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போது பட்டாசு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
Tags:    

Similar News