செய்திகள்
தற்கொலை

பெரம்பலூர் அருகே வறுமையால் கணவன்- மனைவி தற்கொலை

Published On 2019-08-02 08:30 GMT   |   Update On 2019-08-02 08:30 GMT
பெரம்பலூர் அருகே குடும்ப வறுமையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமகிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது வீட்டிற்குள் ராமகிருஷ்ணன், ரேவதி ஆகியோர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவன்-மனைவி இருவரும் எப்படி இறந்தனர் என்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லாததால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

மேலும் ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமகிருஷ்ணன் அவ்வப்போது குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அவர்களது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News