செய்திகள்
நிலக்கோட்டை அருகே காதலித்து திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே இளம்பெண்ணை காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த ஆறுமுகம் பலமுறை அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இந்த விசயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்பதால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஆறுமுகத்திடம் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் ஆறுமுகம் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) லாவண்யா வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.