செய்திகள்

பெரவள்ளூரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை

Published On 2019-05-11 09:02 GMT   |   Update On 2019-05-11 09:02 GMT
பெரவள்ளூரில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

பெரவள்ளூர் 5-வது சர்க்கிள் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். தனியார் நிறுவன ஊழியர்.

இவருடைய மனைவி திவ்யா (24). வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார்.

இதை பார்த்த திவ்யா கத்த தொடங்கினார். உடனே முகமூடி அணிந்து வந்தவர், கத்தினால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி திவ்யாவின் வாயை பொத்தி ஒரு நாற்காலியில் கட்டிபோட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் திவ்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு முகமூடி ஆசாமி வெளியே ஓடினான். திவ்யாவின் குரல் கேட்டு மாடியில் இருந்த தாய் கீழே ஓடிவந்தார்.

இதற்குள் திருடன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News