செய்திகள்

கண்டமங்கலம் அருகே திடீர் தீ- வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பலி

Published On 2019-02-25 17:33 GMT   |   Update On 2019-02-25 17:33 GMT
கண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது. இதில் தூங்கி கொண்டிருந்த பெண் உடல் கருகி பலியானார்.
கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால் மருதூர் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன்(வயது55).விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (51). இவர் அந்த பகுதியில் தனது குடிசை வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென குடிசை வீடு தீ பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது கண்விழித்த விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வரமுயன்றார். ஆனால் வீட்டில் பற்றி எரிந்த தீயின்வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குடிசைவீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. தீயை அணைக்க முடியவில்லை. நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். 

பின்பு அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி தீயில் கருகி இறந்து கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

தீயில் கருகி பலியான விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தீ எப்படி பிடித்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News