செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட நர்சு இடமாற்றம்

Published On 2018-12-13 06:34 GMT   |   Update On 2018-12-13 06:34 GMT
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட நர்சை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்சாக வேலை பார்த்து வருபவர் தங்கரத்தினம். இவர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் 20 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் மகப்பேறு அரசு உதவி தொகை பெறுவதற்கான அட்டவணை வழங்க ரூ.2000 லஞ்சமாக கேட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்கள், கிராம மக்கள் ஆராம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தங்கரத்தினத்தை அறையில் பூட்டி சிறை வைத்தனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி நர்சு தங்கரத்தினத்தை விடுவித்தனர்.

இதற்கிடையே லஞ்சம் கேட்ட அவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

நர்சு தங்கரத்தினம் ஏற்கனவே மூன்று மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News