செய்திகள்

காவிரி ஆற்றில் கலப்பு திருமணம் செய்த ஜோடி ஆணவ கொலை- தந்தை உள்பட 3 பேர் கைது

Published On 2018-11-16 11:23 GMT   |   Update On 2018-11-16 11:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கலப்பு திருமணம் செய்த ஜோடியை ஆணவ கொலை செய்து உடலை காவிரி ஆற்றில் வீசிய தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #HonourKilling
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள தனியார் ஹார்டுவேர் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி (20) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மாதம் 10-ந் தேதி 2 பேரும் திடீரென்று மாயமானார்கள். இந்த நிலையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மண்டியா அருகே சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து பெளகாவாடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டு 2 பேரின் கை, கால்களை கட்டி பிணங்களை காவிரி ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.

இந்த ஆணவ கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், சித்தப்பா வெங்கடேசன், சகோதரர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். #HonourKilling
Tags:    

Similar News