செய்திகள்

இடைத்தேர்தல்-பாராளுமன்ற தேர்தலில் தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன்- விஜயபிரபாகரன் பேட்டி

Published On 2018-11-14 16:59 GMT   |   Update On 2018-11-14 16:59 GMT
இடைத்தேர்தல்-பாராளுமன்ற தேர்தலில் தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். #vijayprabhakaran #vijayakanth #dmdk

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.

இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆண்டவர் கோவில் அருகே செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். #vijayprabhakaran #vijayakanth #dmdk

Tags:    

Similar News