செய்திகள்
குழந்தைகள் தினம்- தினகரன் வாழ்த்து
குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் தன் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இந்நன்னாளில் குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி. ஆர். குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். அம்மா அதனை விரிவுபடுத்தியதோடு, குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இந்நன்னாளில் குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி. ஆர். குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். அம்மா அதனை விரிவுபடுத்தியதோடு, குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran