செய்திகள்

20 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி- கமல்ஹாசன்

Published On 2018-11-12 07:12 GMT   |   Update On 2018-11-12 07:12 GMT
20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
ஊத்தங்கரை:

20 தொகுதி இடைத்தேர்த லில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டு சேருவோம் என்று அறிவித்து இருந்த நிலையில் அவர் திடீரென்று மனம் மாற காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம் என்று தெரிய வந்து உள்ளது.

பாரதிய ஜனதா பேச்சை கேட்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை உடைக்க பாரதீய ஜனதாவில் ஊதுகுழலாக கமல்ஹாசன் செயல்படுகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் கமல்ஹாசனுடன் கூட்டணி கிடையாது என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அறிவித்தார். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

அரூர் தொகுதியில் தனியாக போட்டியிடுவோம். இதேபோல 20 சட்டமன்ற தொகுதிகளிலும் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தமிழகத்தை புதிதாக செதுக்கும் சிற்பிகள் மக்கள் தான். அந்த மக்கள் பணத்துக்காக ஓட்டுகளை விற்க கூடாது.

தேர்தல் நேரத்தில் வெறும் ஓட்டு என்று நினைத்து 5 ஆயிரம், 10 ஆயிரம் வாங்கி கொண்டு மேலும் 5 ஆண்டுகள் கொடுங்கோலர்கள் கையில் குத்தகைக்கு விட்டுவிடாதீர்கள். நீங்கள் வாங்கும் 5 ஆயிரத்தை 5 ஆண்டுகளுக்கு கணக்கு போட்டு பார்த்தால் தினசரி காபி அருந்துவதற்கு கூட கணக்கு வராது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் மக்கள் குறைகளை தீர்க்க முடியும். எனவே மக்களை நம்பி மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. நான் சினிமாவில் கிடைத்த புகழை வைத்து கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களை நம்பி தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேன்.

செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். மக்களாகிய உங்களின் கோரிக்கையை நிறைவேற்ற உங்களுக்கு நீங்களே வாக்கு சீட்டு மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எங்களை வெற்றி பெற செய்யுங்கள். அதன்மூலம் உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினோம். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News