செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் மழை நீர் தேங்கியுள்ளது.

மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை- மீனாட்சி அம்மன் கோவிலில் குளம்போல் தேங்கிய மழைநீர்

Published On 2018-10-08 05:24 GMT   |   Update On 2018-10-08 05:24 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. #MeenakshiAmmanTemple
மதுரை:

மதுரையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

மதுரை மாவட்டத்தில் தற்போது சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி வருகிறது.

நேற்று 7-ந்தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை சில நிமிடங்களில் மிதமான மழை பெய்தது.

நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 1மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையப்பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 85 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன் சராசரி அளவு 4 செ.மீ ஆகும்.

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனை சரி செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள வடக்காடி வீதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இன்று காலை கோவில் ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். #MeenakshiAmmanTemple

Tags:    

Similar News