செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. #MetturDam
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று 4 ஆயிரத்து 33 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 4 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து நேற்று காலை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலை முதல் தண்ணீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று 101.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.79 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரத்து 600 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று 4 ஆயிரத்து 33 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 4 ஆயிரத்து 384 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து நேற்று காலை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலை முதல் தண்ணீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலையும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று 101.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.79 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் நேற்று 7 ஆயிரத்து 600 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று மகிழ்ந்தனர். #MetturDam