செய்திகள்
மக்களவைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு: தம்பிதுரை கணிப்பு
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இரு கட்சிகளும் அரசியல் என்ற முறையில் நட்புடன் இருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
திருச்சி:
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி பேரணி நடத்தியது தொடர்பான செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறுகின்றனர். அமைச்சரின் செயல்பாடுகளை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் என்ற முறையில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. நட்புடன் இருக்கிறது. ஆனால், அரசு என்ற முறையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நட்புடன் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #LSPolls
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி பேரணி நடத்தியது தொடர்பான செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறுகின்றனர். அமைச்சரின் செயல்பாடுகளை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும்.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் என்ற முறையில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. நட்புடன் இருக்கிறது. ஆனால், அரசு என்ற முறையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நட்புடன் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #LSPolls