செய்திகள்

ஒகேனக்கல் மெயினருவியில் 31-வது நாளாக குளிக்க தடை

Published On 2018-08-07 05:47 GMT   |   Update On 2018-08-07 05:47 GMT
மெயினருவியில் தடுப்பு கம்பிகள் உடைந்து போனதால் நீர்வரத்து குறைந்தும் இன்று 31-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைவானதால் தமிழகத்திற்கு நீர்வரத்து படிபடியாக குறைந்தது. இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு கடந்த சிலநாட்களாக 15 ஆயிரம் கனஅடிக்கும் குறைவான அளவிலேயே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் 13 ஆயிரம் கனஅடியாக வந்த கொண்டிருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நீர்வரத்து குறைந்தும் சுற்றுலா பயணிகளை மெயினருவியில் தடுப்பு கம்பிகள் உடைந்து போனதால் இன்று 31-வது நாளாக அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிகுள்ளாகினர். மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரத்திலும், மெயினருவிக்கு செல்லும் நடைபாதையின் அருகே நீரோடையிலும் பாதுகாப்புடன் குளித்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று வழக்கமாக பரிசல் இயக்கப்படும் மாமரத்துகடுவு பகுதியில் பரிசலை இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாற்று வழி பாதையான கோத்திக்கல் பாறையில் இருந்து கூட்டாறு வரை பரிசல் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் சவாரி சென்று மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News