செய்திகள்

5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

Published On 2018-07-17 08:04 GMT   |   Update On 2018-07-17 08:10 GMT
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon
சென்னை:

கேரள மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 1 மாதமாக பெய்து வருகிறது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon

Tags:    

Similar News