search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை எச்சரிக்கை"

    அந்தமானுக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே அந்தமானுக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்துவரும் பட்சத்தில் 11 மற்றும் 12-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும்.

    இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும்பட்சத்தில் மழை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் நேற்று இரவு பெய்த மழைக்கே ரோடு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
    ×