என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை 10 மணிக்குள் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், சில தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 10) காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






