செய்திகள்
தேர்தல் அதிகாரியை தாக்கிய விவகாரம்: மு.க.அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு
மேலூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது அதிகாரியை தாக்கியதாக மு.க.அழகிரி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலூர்:
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்தஅம்மன் கோவில் அருகில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.வினர் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அங்கு தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய காளிமுத்து தன்னை மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட தி.மு.க.வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி பழனிகுமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி, பி.எம்.மன்னன் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி பழனிகுமார் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள ஏழை காத்தஅம்மன் கோவில் அருகில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க.வினர் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அங்கு தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய காளிமுத்து தன்னை மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட தி.மு.க.வினர் தாக்கியதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நீதிபதி பழனிகுமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி, பி.எம்.மன்னன் உள்ளிட்ட 9 பேர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து நீதிபதி பழனிகுமார் வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.