செய்திகள்

2 பாடங்களில் தோல்வி பிளஸ்-2 மாணவி தீக்குளிப்பு - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2018-05-16 07:43 GMT   |   Update On 2018-05-16 07:43 GMT
பிளஸ் டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்ததால் மன வேதனை அடைந்த மாணவி முத்துலட்சுமி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம். பனை ஏறும் தொழிலாளி. இவரது மகள் முத்துலட்சுமி (வயது 16). இவர் குளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. அதில் கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய இரு பாடங்களில் மாணவி முத்துலட்சுமி தோல்வி அடைந்தார். இதில் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.

உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி தீக்குளித்தது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News