குஜராத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வந்த ரூ.15 லட்சம் குட்கா பறிமுதல்
மாதவரம்:
குஜராத்தில் இருந்து சென்னைக்கு புகையிலை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் லாரியில் கடத்தப்பட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை மாதவரம் மேம்பாலம் அருகே துணை கமிஷனர் கலைச்செல்வன் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குஜராத்தில் இருந்து வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை இருந்தது. அவற்றை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
லாரியை ஓட்டி வந்த ஈசாத் அகமது என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி புரசைவாக்கத்தை சேர்ந்த வியாபாரி முனை துபேயையும் பிடித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இந்த குட்கா புகையிலைகளை அவர்கள் சப்ளை செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? யார்? வெளிமாநில குட்கா வியாபாரிகளுடன் தொடர்பு கிடைத்தது எப்படி? அவர் எவ்வாறு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.