செய்திகள்

சாத்தூரில் தீப்பெட்டி குடோனில் தீ விபத்து- ரூ.80 லட்சம் தீக்குச்சிகள் நாசம்

Published On 2018-02-21 05:23 GMT   |   Update On 2018-02-21 05:23 GMT
சாத்தூரில் தீப்பெட்டி குடோனில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசமாயின.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் சடையம்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு மூட்டை, மூட்டையாக தீக்குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை குடோனில் இருந்த தீக்குச்சிகளை சாக்கு மூடையில் கட்டிய போது உராய்வு ஏற்பட்டது. இதில் குச்சிகள் தீப்பிடித்து எரிந்தன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. #Tamilnews
Tags:    

Similar News