செய்திகள்
தஞ்சையில் போலீஸ் ஜீப் ரோட்டில் கவிழ்ந்தது- சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்
தஞ்சையில் இன்று அமைச்சர் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்:
வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று காலை காரில் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசார் ஜீப் ஒன்று பின்தொடர்ந்து சென்றது. அந்த ஜீப் ரோட்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி திடீரென கவிழந்தது. இதில் ஜீப்பில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
அவர்களை உடனடியாக மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அவர்களை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
தஞ்சையில் அமைச்சருக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் கவிழ்ந்து போலீசார் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews