search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sub inspector injured"

    காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் போலீசில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வருபவர் முருகானந்தம் (55). இவர் வெள்ளகோவில் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.நேற்று இரவு பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். இன்று காலை 6.45 மணியளவில் கோவை-கரூர் சாலையில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த பலூன் விரிந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் லேசான காயத்துடன் தப்பினார். அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கயம் டி.எஸ்.பி. செல்வம் பார்த்து விபத்து குறித்து கேட்டறிந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சப்- இன்ஸ்பெக்டருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இளங்கோவன் உள்ளார். இன்று காலை இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து வழக்கம்போல் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே வந்தபோது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இளங்கோவன் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
    ×