search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car lorry crash"

    காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் போலீசில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வருபவர் முருகானந்தம் (55). இவர் வெள்ளகோவில் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.நேற்று இரவு பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். இன்று காலை 6.45 மணியளவில் கோவை-கரூர் சாலையில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த பலூன் விரிந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் லேசான காயத்துடன் தப்பினார். அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கயம் டி.எஸ்.பி. செல்வம் பார்த்து விபத்து குறித்து கேட்டறிந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் அருகே இன்று கார்-லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கீழமாயனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவர் தனது  உறவினர்களான சாலப்பட்டியை  சேர்ந்த நவீன், கீழமாயனூர் கோமதி, அருணா மற்றும் மேலவெளியூர் முருகேசன் மற்றும் 1 வயது குழந்தை கிஷோக் ஆகியோருடன் இன்று காலை முசிறி ஈச்சங்கோட் டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.

    லாலாப்பேட்டை மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது அந்த வழியாக எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மினி லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த குழந்தை கிஷோக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதுகுறித்த தகவல் அறிந்த தும் லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிய வர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன், கோமதி, அருணா ஆகியோர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந் தது. முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து லாலாப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பேரையூர்:

    நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள புளியஞ்சுவனத்தைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தமிமுன் (36) என்பவரும் மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் பஞ்சரானது. இதனால் காரை சாலையோரமாக நிறுத்தி டயரை கழற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த லாரி எதிர் பாராத விதமாக கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தமிமுன் படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுப்பையாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவையில் நகை கடை அதிபர் விபத்தில் பலியானார். அவரது மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவை:

    கோவை ராஜவீதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 47). இவர் கோவை, நாகர்கோவிலில் சுரபி கோல்டு என்ற பெயரில் தங்க நகைகடை நடத்தி வருகிறார்.

    மேலும் நகைகளை மொத்தமாக வாங்கி பல்வேறு கடைகளுக்கு சப்ளையும் செய்து வந்தார்.

    தீபாவளியை கொண்டாட நாகர்கோவிலில் இருந்து புகழேந்தி கடந்த வாரம் கோவை வந்தார். நேற்று அவர் தனது மனைவி ஷீலாவுடன் போத்தனூர்- செட்டிப்பாளையம் ரோட்டில் காரில் சென்றார். அப்போது அந்த வழியாக திருப்பூரில் வந்த லாரி கார் மீது மோதி விபத்தானது.

    இதில் சம்பவ இடத்திலேயே புகழேந்தி உடல்நசுங்கி பலியானார். அவரது மனைவி ஷீலா படுகாயத்துடன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவை அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பாகூர்:

    திருச்சி மாவட்டம் ஒரலூர் கிராமம் ஞானம்காலனி ராமலிங்கா நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது48). இவர் புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தினமும் வங்கி பணிக்கு காரில் புதுவை வந்து செல்வார்.

    அதுபோல் இன்று காலை வங்கி பணிக்காக வீட்டில் இருந்து காரில் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ரெட்டிச்சாவடி அருகே காட்டுக்குப்பம் என்ற இடத்தில் வந்த போது புதுவையில் இருந்து கடலூருக்கு கம்பி ஏற்றி வந்த லாரியும், புகழேந்தி ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி புகழேந்தி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கரூர் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கருப்பண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 37). அதே ஊர் கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மனைவி விநாயகி (34). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் முகமது ஆரிப் தினமும் காரிலும், விநாயகி கல்லூரி பேருந்திலும் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கல்லூரி பேருந்தை விநாயகி தவற விட்டார். அப்போது அந்த வழியாக வந்த முகமது ஆரிப் விநாயகியை காரில் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

    நாணப்பரப்பு என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த முகமது ஆரிப் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த கார் சென்டர் மீடியனில மோதி எதிர் திசைக்கு சென்றது.
    அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இதில் பலமுறை உருண்ட காருக்குள் இருந்த முகமது ஆரிப், விநாயகி இருவரும் இடிபாடுகளுக்குள்  சிக்கி பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே பிணமானார்கள்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் பலியான இருவ ரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கரூர் அருகே இன்று அதிகாலை கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

    அரவக்குறிச்சி:

    பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த சிலர் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் நேற்றிரவு பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.

    காரை கர்நாடகா மாநிலம் கோலார் கோல்ட் பீல்ட் உருகம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 27) ஓட்டினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ரெங்கமலை கணவாய் அருகில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறிய கார், சாலையின் சென்டர் மீடியனில் மோதி மறுபுறம் உள்ள சாலையில் பாய்ந்தது.

    அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து பரமக்குடிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்து, இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் கே.ஆர்.புரம் விஜினிபுரம் குல்சார் பில்டிங் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்த பிரட்டிசாமுவேல், ராக் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பெரணாம்பட்டுவை சேர்ந்த குமார் (50) ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

    மேலும் பெங்களூர் கே. ஆர். புரத்தை சேர்ந்த மேரி அன் ஜாய்ஸ்(45), பெங்களூர் ராமமூர்த்தி நகர் நாராயணரெட்டி லேஅவுட் பகுதியை சேர்ந்த கிரேசி கீர்த்திகா (18), ரூத் (45), டிரைவர் தினேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து ஏற்பட்டது எப்படி? என்று தெரியவில்லை. டிரைவர் தினேஷ் தூங்கிய தன் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான குமார் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள் ஜோலார்பேட்டையை சேர்ந்த சுதாகரன் (37)என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். சுதாகரன் அவரது நண்பர் தாமோதரன் என்பவருடன் பச்சக்குப்பத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுதாகரன், தாமோதரன் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேப்பூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அப்பு(வயது 92). இவரது மகன் கண்ணன்(66). கண்ணனின் மனைவி ஜெயஸ்ரீ(56). இவர்களது மகள் காமாட்சி(19). இவர்கள் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி தஞ்சாவூரில் இருந்து திருத்தணிக்கு ஒரு காரில் சென்றனர். திருத்தணி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் அங்கிருந்து தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர். காரை திருவையாறை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (40) ஓட்டி வந்தார்.

    கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அரியநாச்சி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் சுப்பிரமணியனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்பு, கண்ணன், ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    கார் டிரைவர் சுப்பிரமணியன், கண்ணனின் மகள் காமாட்சி ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காமாட்சியையும், கண்ணனையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 3 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டறம்பள்ளியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நாட்டறம்பள்ளி:

    ஆம்பூரை சேர்ந்த அப்துல் பாஷா மகன் ஜமீல்அகம்மது (வயது 27). தோல் வியாபாரி. இவர் இன்று காலை தொழில் சம்மந்தமாக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர்பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென பழுதானது. காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, வாணியம்பாடியில் இருந்து ஓசூருக்கு சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் இருந்த ஜமீல் அகம்மது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    காரும் லாரியும் மோதிய விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாலாபேட்டை:

    குளித்தலையில் இருந்து ஈரோட்டிற்கு மணல் லாரி சென்றது. அதனை குளித்தலை நாப்பாலையத்தை சேர்ந்த பத்மநாதன் (46) ஓட்டிச்சென்றார். அப்போது எதிரே அரவக்குறிச்சி தாலுகா சின்ன கேத்தம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலசுப்ரமணி (50) ஓட்டி வந்த காரும், லாரியும் மோதின. இதில் பாலசுப்ரமணி(50) ,அவரது மனைவி முத்து லட்சுமி (41), மகன் தினேஸ்(21) , மகள் திவ்யா(18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி இறந்தார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×