search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே கார்-லாரி மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி
    X

    கரூர் அருகே கார்-லாரி மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி

    கரூர் அருகே இன்று கார்-லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கீழமாயனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவர் தனது  உறவினர்களான சாலப்பட்டியை  சேர்ந்த நவீன், கீழமாயனூர் கோமதி, அருணா மற்றும் மேலவெளியூர் முருகேசன் மற்றும் 1 வயது குழந்தை கிஷோக் ஆகியோருடன் இன்று காலை முசிறி ஈச்சங்கோட் டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.

    லாலாப்பேட்டை மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது அந்த வழியாக எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மினி லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த குழந்தை கிஷோக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதுகுறித்த தகவல் அறிந்த தும் லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிய வர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன், கோமதி, அருணா ஆகியோர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந் தது. முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து லாலாப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×