என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மீது லாரி மோதல்"

    திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பேரையூர்:

    நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள புளியஞ்சுவனத்தைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தமிமுன் (36) என்பவரும் மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் பஞ்சரானது. இதனால் காரை சாலையோரமாக நிறுத்தி டயரை கழற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த லாரி எதிர் பாராத விதமாக கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தமிமுன் படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுப்பையாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவையில் நகை கடை அதிபர் விபத்தில் பலியானார். அவரது மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவை:

    கோவை ராஜவீதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 47). இவர் கோவை, நாகர்கோவிலில் சுரபி கோல்டு என்ற பெயரில் தங்க நகைகடை நடத்தி வருகிறார்.

    மேலும் நகைகளை மொத்தமாக வாங்கி பல்வேறு கடைகளுக்கு சப்ளையும் செய்து வந்தார்.

    தீபாவளியை கொண்டாட நாகர்கோவிலில் இருந்து புகழேந்தி கடந்த வாரம் கோவை வந்தார். நேற்று அவர் தனது மனைவி ஷீலாவுடன் போத்தனூர்- செட்டிப்பாளையம் ரோட்டில் காரில் சென்றார். அப்போது அந்த வழியாக திருப்பூரில் வந்த லாரி கார் மீது மோதி விபத்தானது.

    இதில் சம்பவ இடத்திலேயே புகழேந்தி உடல்நசுங்கி பலியானார். அவரது மனைவி ஷீலா படுகாயத்துடன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர் அருகே இன்று காலை கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி விரிவுரையாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கருப்பண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 37). அதே ஊர் கைக்கோளர் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மனைவி விநாயகி (34). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இதில் முகமது ஆரிப் தினமும் காரிலும், விநாயகி கல்லூரி பேருந்திலும் பணிக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் கல்லூரி பேருந்தை விநாயகி தவற விட்டார். அப்போது அந்த வழியாக வந்த முகமது ஆரிப் விநாயகியை காரில் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

    நாணப்பரப்பு என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த முகமது ஆரிப் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த கார் சென்டர் மீடியனில மோதி எதிர் திசைக்கு சென்றது.
    அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியது. இதில் பலமுறை உருண்ட காருக்குள் இருந்த முகமது ஆரிப், விநாயகி இருவரும் இடிபாடுகளுக்குள்  சிக்கி பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே பிணமானார்கள்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் பலியான இருவ ரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள் ஜோலார்பேட்டையை சேர்ந்த சுதாகரன் (37)என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். சுதாகரன் அவரது நண்பர் தாமோதரன் என்பவருடன் பச்சக்குப்பத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுதாகரன், தாமோதரன் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×