என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதல்- டிரைவர் பலி
ஆம்பூர்:
வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள் ஜோலார்பேட்டையை சேர்ந்த சுதாகரன் (37)என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். சுதாகரன் அவரது நண்பர் தாமோதரன் என்பவருடன் பச்சக்குப்பத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுதாகரன், தாமோதரன் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்