search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காயம்
    X

    கடலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காயம்

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சப்- இன்ஸ்பெக்டருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இளங்கோவன் உள்ளார். இன்று காலை இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து வழக்கம்போல் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கடலூர் முதுநகர் மரப்பாலம் அருகே வந்தபோது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இளங்கோவன் கீழே விழுந்து காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
    Next Story
    ×