செய்திகள்

கட்சியின் நலனுக்காகவே ஏ.கே.போஸ் கருத்து தெரிவித்தார்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2017-10-21 11:03 GMT   |   Update On 2017-10-21 11:03 GMT
திருமங்கலத்தில் நடந்த அ.திமு.க. பொதுக் கூட்டத்தில் ஏ.கே.போஸ் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. கட்சியின் நலனுக்காகவே கருத்து தெரிவித்தார் என்று ராஜன் செல்லப்பா கூறினார்.

மதுரை:

மதுரை புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் மீறி அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மதுரையில் வளர்ச்சித் திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

திருமங்கலத்தில் நேற்று நடந்த அ.திமு.க. பொதுக் கூட்டத்தில் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டு பேசவில்லை. அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கும் யாரும் குந்தகம் விளைவித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடுபவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே பதவி ஆசை பற்றி ஏ.கே.போஸ் குறிப்பிட்டுள்ளார். அதே மேடையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு தொடர்ந்து நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின்போது நிர்வாகிகள் அண்ணாதுரை, முருகன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கார்த்திக் முனியசாமி, கண்ணன், மகாதேவன், வினுவர்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News