செய்திகள்
நின்ற லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல்: வடமாநில லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி
நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பின்னோக்கி வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியதில் நடுவில் சிக்கிய லாரி டிரைவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செங்குன்றம்:
உத்தரபிரேதசத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் மிளகாய் ஏற்றிக்கொண்டு டிரைவர் கமல்சிங்(வயது49) என்பவர் மாதவரத்தில் உள்ள ஒரு குடோனில் இறக்குவதற்காக வந்தார். அவர் லாரியை மாதவரம் மேம்பாலம் அருகே நிறுத்திவிட்டு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னோக்கி வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் நடுவில் சிக்கிய லாரி டிரைவர் கமல்சிங் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஒடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
உத்தரபிரேதசத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் மிளகாய் ஏற்றிக்கொண்டு டிரைவர் கமல்சிங்(வயது49) என்பவர் மாதவரத்தில் உள்ள ஒரு குடோனில் இறக்குவதற்காக வந்தார். அவர் லாரியை மாதவரம் மேம்பாலம் அருகே நிறுத்திவிட்டு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னோக்கி வந்த மற்றொரு கன்டெய்னர் லாரி, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் நடுவில் சிக்கிய லாரி டிரைவர் கமல்சிங் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஒடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.