செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் வந்து இறங்கிய மு.க.ஸ்டாலின். அருகில் எ.வ.வேலு, ஏ.பி.நந்தகுமார்.

ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2017-09-22 11:19 GMT   |   Update On 2017-09-22 11:19 GMT
ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், கார் மூலம் பர்கூரில் உள்ள சுகவனம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ஜோலார்பேட்டை:

கிருஷ்ணகிரி அருகே கடந்த வாரம் நடந்த விபத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், மாவட்ட செயலாளருமான சுகவனத்தின் தம்பி வீரராகவன் உயிரிழந்தார். இவருடைய உருவப்படத் திறப்பு விழா இன்று நடைபெறுகிது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் மூலம் காட்பாடி வழியாக ஜோலார்பேட்டைக்கு இன்று காலை 9.25 மணிக்கு வந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்த அவருக்கு, தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர் மேற்கு மாவட்ட பொருப்பாளர் முத்தமிழ் செல்வி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. சூர்ய குமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் உள்பட வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின், கார் மூலம் பர்கூரில் உள்ள சுகவனம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News