செய்திகள்

கும்பகோணத்தில் தொழிலாளி குத்திக் கொலை: மற்றொரு சம்பவத்தில் ஆண் எரித்து கொலை

Published On 2017-08-21 07:56 GMT   |   Update On 2017-08-21 07:56 GMT
கும்பகோணத்தில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணம் ராம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவரது சொந்த ஊர் விருத்தாசலம் ஆகும். ஆனால் கும்பகோணத்தில் குடும்பத்துடன் தங்கி கேரளாவில் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவரும் செல்வராஜும் நண்பர்கள். ஆனால் இவர்களது மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் செல்வராஜூம், காசிநாதனும் பேசிக் கொள்வார்கள்.

நேற்று இரவு இருவரும் மது குடித்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் பாட்டிலால் காசிநாதன் தலையில் அடித்தார்.

உடனே சுதாரித்து கொண்ட காசிநாதன் அருகில் கிடந்த கத்தியை எடுத்து செல்வராஜ் நெஞ்சில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

பாட்டில் குத்தியதில் காயம் அடைந்த காசிநாதன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் சுடுகாடு அருகே 40 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவரை யாரோ எரித்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து திருநீலக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கும்பகோணத்தில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News