செய்திகள்
பரமக்குடியில் பேஸ்புக்கில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
பேஸ்புக்கில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி:
பரமக்குடி அருகே உள்ள மஞ்சூரை சேர்ந்த திருமணமான 24 வயதுடைய பெண்ணுக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த நாராயணசாமி மகன் மஞ்சுநாதன் (24)என்பவருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
2 பேரும் பேஸ்புக் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பழகி வந்தனர்.
இந்நிலையில் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சு நாதன், அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து படங்களை வெளியிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாதனை கைது செய்தார்.