செய்திகள்

அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்: சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பேச்சு

Published On 2017-06-29 02:25 GMT   |   Update On 2017-06-29 02:25 GMT
அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர். ராமசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் குட்கா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேச அனுமதி கேட்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

அப்போது அவர், ஆட்சியை சிறப்பாக நீங்கள் நடத்த வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் (அ.தி.மு.க. உறுப்பினர்கள்) ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதை தான் நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். பின்னர் அவர் ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் என்று கூறி குட்கா பிரச்சினை தொடர்பாக சில வார்த்தைகளை தெரிவித்தார். அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தன்னை பேச அனுமதிக்காததை கண்டித்து கே.ஆர்.ராமசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 
Tags:    

Similar News