செய்திகள்
எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2017-06-26 06:15 GMT   |   Update On 2017-06-26 06:15 GMT
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் கூறினர்.
கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஆறுக்குட்டி. இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஆவார்.

நேற்றுமுன்தினம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து வீடு திரும்பினார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி டாக்டர்கள் கூறும் போது, ‘‘ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார்’ என்றனர்.

கட்சி நிர்வாகிகள் கூறும் போது, ‘‘கடந்த வாரம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்தார். அப்போது ஓட்டல்களில் சாப்பிட்டதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார், இன்று மாலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்’ என்றனர்.


Tags:    

Similar News