என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி அனுமதி"
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
- ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று காலை மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் மனவேதனை அடைந்து விஷத்தை குடித்தார். பின்னர் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வகுப்பறையில் இருந்தபோது மாணவி வாந்தி எடுத்தார். இதனை பார்த்த ஆசிரியர் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது மாணவி விஷம் குடித்ததாக கூறினார்.
இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை மீட்டு செக்கனூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்