செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துடன் ‘செல்பி’ புகைப்படம் எடுத்த குழந்தைகள்

Published On 2017-05-27 10:40 GMT   |   Update On 2017-05-27 10:41 GMT
கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் குழந்தைகள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கோவை:

முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24-ந் தேதி ஆயுர்வேத சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு 3 நாட்கள் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தன்னை பார்ப்பதற்காக ஆர்ய வைத்ய சாலைக்கு ஆதரவாளர்கள் யாரும் வர வேண்டாம் என ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

கடந்த 3 நாட்களாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு கேரள பாரம்பரிய ஆயுர் வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கேரள பாரம்பரிய காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்ட அவருக்கு மூலிகை எண்ணையால் மசாஜ் செய்யப்பட்டது.

நேற்று மாலை ஆர்ய வைத்திய சாலைக்குள் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஓ.பன்னீர் செல்வம் சிகிச்சை முடிந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார்.
Tags:    

Similar News