செய்திகள்
விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை வழக்கு: காண்டிராக்டர் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. மீண்டும் விசாரணை
விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலை குறித்து காண்டிராக்டர் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. இன்று இரண்டாவது கட்ட விசாரணையை தொடங்கினார்.
நாமக்கல்:
சுகாதாரத்துறை அமைச்சரின் நண்பரும், நாமக்கல்லை சேர்ந்த காண்டிராக்டருமான சுப்பிரமணிதற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்ய தூண்டியது யார் என்பது குறித்து கடிதமும் எழுதி வைத்து இருந்தார்.
இவரது தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே சுப்பிரமணியம் குடும்பத்தினரிடம் சி.பி. சி.ஐ.டி எஸ்.பி. நாகஜோதி விசாரணை நடத்தினார். இன்று அவர் இரண்டாவது கட்ட விசாரணையை தொடங்கினார். அவருடன் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோரும் சென்றனர். சுப்பிரமணியம் மனைவி சாந்தி, மகள் அபிராமி, மருமகன் அரவிந்தன், மகன் சபரீஷ் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சரின் நண்பரும், நாமக்கல்லை சேர்ந்த காண்டிராக்டருமான சுப்பிரமணிதற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்ய தூண்டியது யார் என்பது குறித்து கடிதமும் எழுதி வைத்து இருந்தார்.
இவரது தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே சுப்பிரமணியம் குடும்பத்தினரிடம் சி.பி. சி.ஐ.டி எஸ்.பி. நாகஜோதி விசாரணை நடத்தினார். இன்று அவர் இரண்டாவது கட்ட விசாரணையை தொடங்கினார். அவருடன் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோரும் சென்றனர். சுப்பிரமணியம் மனைவி சாந்தி, மகள் அபிராமி, மருமகன் அரவிந்தன், மகன் சபரீஷ் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.