செய்திகள்

ராஜபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி: கணக்குகளை சமர்ப்பிக்காத 5 கிராம நிர்வாக அதிகாரிகள் ‘சஸ்பெண்டு’

Published On 2017-05-22 10:24 GMT   |   Update On 2017-05-22 10:24 GMT
ராஜபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி கணக்குகளை சமர்ப்பிக்காத 5 பேரையும் சாத்தூர் ஆர்.டி.ஓ. கிருஷ்ணம்மாள் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தர விட்டார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.

ஜமாபந்தியின் போது வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், வடக்கு வெங்காநல்லூர் கூடுதல் பொறுப்பில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி மேனகா, அயன்கொல்லங்கொண்டான் கிராம நிர்வாக அதிகாரி முத்து, அதே கிராமத்தில் கூடுதல் பொறுப்பில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், திருச்செல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ராதா ஆகிய 5 பேரும் கணக்கு தணிக்கைக்கு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.

எனவே இந்த 5 பேரையும் சாத்தூர் ஆர்.டி.ஓ. கிருஷ்ணம்மாள் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தர விட்டார்.

Tags:    

Similar News